Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

மதுபானங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு :

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நன்னடத்தை விதிகள் கடந்த பிப்.26 முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது, பதுக்குதல், கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், அரசு மதுபானக் கடைகளில் தினசரி விற்பனையைக் கண்காணிக்கவும், மதுபானங்கள் குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வட்டாட்சியர் நிலையில் நாகப்பட்டினம் டாஸ்மாக் உதவி மேலாளர் ஏ.ஜெயபாலன்(செல்போன் எண்: 8072366975), உதவி மேலாளர் ஆர்.சங்கர் (செல்போன் எண்: 9944952115) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், உதவி மேலாளர் ஏ.ஜெயபாலன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், ஆர்.சங்கர் பறக்கும் படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, மதுபானங்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் நேரிலோ அல்லது செல்போன் மூலமாகவோ தெரிவிக்கலாம் என ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x