Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் 3 தொகுதிகளில் உள்ள வாக்குப் பெட்டிகளும் இந்த மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
இதையடுத்து, வாக்கு எண்ணுமிடம், வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள் ஆகியவற்றை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள், கழிப்பறை வசதிகள் குறித்து கும்பகோணம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயனிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியபோது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களில் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT