Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM
பசுவந்தனை அருகே தெற்கு பொம்மையாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த காளிப்பாண்டி மகன் பாலமுருகன்(23). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 13-ம் தேதி பிணையில் வந்த அவர், நேற்றுமுன்தினம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தெற்கு பொம்மையாபுரம் இரட்டை கொலையில் பழிக்கு பழியாக பாலமுருகன் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (35), கரிசல்குளத்தைச் சேர்ந்த முனியசாமி (45), மாரிராஜ் (35) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT