Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM

அரசு ஊழியர்கள் 818 பேருக்கு கரோனா தடுப்பூசி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக அரசு அலுவலகங்களில் இரு நாட்கள் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

வருவாய்த்துறையைச் சேர்ந்த 440 பணியாளர்களும், மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் பணியாற்றும் 378 பணியாளர்கள் என மொத்தம் 818 பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டது. பிற அரசுத்துறை பணியாளர்கள் தாமாகவே முன்வந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஆட்சியர் மா.அரவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x