Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

தா.பண்டியன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பண்டியன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (வயது 88). வயது மூப்பு காரணத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இவர் நேற்று சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் சிறுநீரக பிரச்சினை மற்றும் குறைந்த ரத்தஅழுத்தம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x