Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

ஆண்டிபட்டியில் கூலி தொழிலாளி கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தைச்சேர்ந்தவர் வெள்ளத்துரை(40). கூலித் தொழிலாளி. இவருக்கு 2 குழந் தைகள் உள்ளனர்.

ராயவேலூர் கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் வெள் ளத்துரை இறந்துகிடந்தார். உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து உறவினர்கள் ராஜதானி போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். வெள்ளத்து ரையின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம் குறித்து ராஜதானி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x