Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பதற்றமான வாக்குச்சாவடி விவரம் சேகரிப்பு

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் முதலில் 3,048 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 1,574 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை, வாக்குப்பதிவு சமயத்தில் அங்கு எவ்வளவு போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும், கடந்த தேர்தல்களின்போது அங்கு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளதா என்பன போன்ற விவரங்களை வருவாய் மற்றும் காவல் துறையினர் இணைந்து சேகரித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிப் போரின் பெயர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x