Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

விளையாட்டு மைதானம் திறப்பு

இங்கு தனியார் அமைப்பின் பங்களிப்புடன் விளையாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது. கல்லூரிக்கு பின்புறம் இருந்த காலியிடத்தில் ரூ.12 லட்சம் செலவில் கைப்பந்து, கபடி, பால் பேட்மின்டன், கோகோ, கால்பந்து ஆகிய 6 விளையாட்டுகளுக்காக மைதானங்கள் தயார் செய்யப்பட்டன.

இதன் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமைவகித்தார். கல்லூரி முதல்வர் தி.சுகுமாரன் முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு மைதானத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காரமடை ரோட்டரி சங்க தலைவர் சிவ சதீஷ்குமார், துணைத்தலைவர் ஞானசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x