Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்து ஜனநாயக முன்னணி அமைப்பினர், கையில் சாமி படத்துடன் வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில்,‘‘ மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் நடத்தப்படும் தேர்த் திருவிழாவுக்கு மக்களை அனுமதிக்க வேண்டும்.
ஆலயங்களில் தேர்த் திருவிழாக்களை நடத்த வேண்டும்’’ எனக் கூறியிருந்தனர்.
கோவை மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில்,‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, முத்திரைச் சீட்டு முறையிலான வாக்குப்பெட்டிகளையே பயன்படுத்த வேண்டும்’’ எனக் கூறியிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT