Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM
காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை பகுதியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று முன்தினம் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியை அமைத்திருந்தனர். பாரம்பரிய தொழில்நுட்பங்கள் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட பொருட்கள், அமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT