Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM
காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள முரசொலி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் டி.என்.சுரேஷ், காரைக்கால் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட முரசொலி நகர் பகுதியில், அரசால் வழங்கப்பட்ட இலவச மனைகளில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மின்சாரம், குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்தி இப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த நகருக்குச் செல்லும் வழியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதால், இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT