Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

செம்பனார்கோவில் அருகே பூட்டிய வீட்டில் ஜன்னலை உடைத்து நகை திருட்டு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த கருவாழக்கரை மருதூரைச் சேர்ந்தவர் துரை(60). இவர், இதய சிகிச்சை செய்துகொள்வதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் கடந்த 3-ம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்றார். பின்னர், நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த 7 பவுன் நகை, ரூ.20,000 ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x