Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
புதுச்சேரி வேளாண்துறை சார்பில்கடந்த சொர்ணவாரி பருவம் 2020-ல்நெல் சாகுபடி செய்த விவசாயி களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தாவரவியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது. வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டுஊக்கத்தொகைக்கான காசோ லையை வழங்கினார்.
விழாவில் முதல்வர் நாராய ணசாமி பேசியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தொடர்ந்து திட்டங் களை நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்தும் வகையில் மின்விநியோகத்தை மத்திய அரசு தனியார் மயமாக்க போகி றது. எப்படி இருந்தாலும் விவசாயி களுக்கு இலவச மின்சாரம் திட்டம் தொடரும்.
விவசாய விளைநிலங்களுக்கு காப்புறுதி அளிக்கப்படும் என பிரதமர் மோடி இப்போது அறிவிக் கிறார். ஆனால் புதுச்சேரி அரசு, இத்திட்டத்தை ஏற்கெனவே தொடங்கி முழுமையாக நடை முறைப்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவி லேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT