Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
தஞ்சாவூர்: சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 21-வது ஆண்டாக ரூ.10 லட்சம் மதிப்பிலான பொங்கல் பைகள் வழங்கப்பட்டன.
திருமலைசமுத்திரம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, தேவராயநேரி கிராம மக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு கிலோ பருப்பு ஆகியவை கொண்ட பொங்கல் பை வழங்கப்பட்டது.
இதில், திருமலைசமுத்திரத்தில் 710 குடும்பங்களுக்கும், வல்லம்புதூரில் 510 குடும்பங்களுக்கும், மொன்னையம்பட்டி மற்றும் குருவாடிப்பட்டியில் 750 குடும்பங்களுக்கும், தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் 300 குடும்பங்களுக்கும் பொங்கல் பை வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பைகள் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆர்.சேதுராமன், துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்தியசுப்பரமணியம், டீன் டாக்டர் எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் சார்பாக வழங்கப்பட்டது.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT