Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

தொழிலாளி கொலை வழக்கில் மனைவி கைது

ஓசூர்

ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி தனபால் (27). இவரது மனைவி அருள் சத்யா (20). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனபால் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், தனபால் மனைவி அருள் சத்யாவுக்கும், ஊத்தங்கரை வட்டம் மோட்டூர் அடுத்த பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் (எ) சரவணன் என்பவருடன் கூடா நட்பு இருந்தது. இதனையறிந்த தனபால் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள் சத்யா, மணிகண்டன் உதவியுடன் தனபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x