Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

கோவில்பட்டி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. ஜெயக்குமார் அங்கு மரக்கன்று நட்டார்.

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் திடீரென கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு வந்தார். அங்குள்ள முக்கிய வழக்குகளின் கோப்புகளையும், பராமரிக்கப்படும் ஆவணங் களையும் பார்வையிட்டார்.

மேலும், புயல் மற்றும் பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களை ஆய்வு செய்து, போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் அய்யப்பன், எஸ்ஐகள் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல், குரு சந்திர வடிவேல், அங்காள ஈஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x