Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

ரூ.15 கோடி மதிப்பு செல்போன் கொள்ளை வழக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த மேலும் 7 பேர் கைது

ஓசூர் அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து வடமாநிலத்துக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மேலுமலை என்னுமிடத்தில் கொள்ளையர்கள் வழிமறித்தனர். லாரி ஓட்டுநர்களை தாக்கி ரூ.15 கோடி மதிப்புள்ள 14,440 செல்போன்களை கொள்ளையடித்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு வடமாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளிகளான பாரத் தேஜ்வாணி, அமிதாப தத்தா ஆகியோரை கடந்த வாரம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பாரத் தேஜ்வாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வட மாநிலங்களைச் சேர்ந்த மேலும் 7 பேரை கைது செய்துள்ள தனிப்படை போலீஸார் சூளகிரிக்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x