Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

அரசை கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசை கண்டித்து பாஜக மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் மகளிர் அணியினர் ராஜா தியேட்டர் சந்திப்பில் இருந்து நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டப்பேரவையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலையம் அருகில் போலீஸார் அவர்களை தடுத்ததால் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி அல்லது அதற்கான பணத்தை வழங்காததை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை புதுச்சேரி அரசு செயல்படுத்தாததாலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x