Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

கைவிடப்பட்ட இரு குழந்தைகள் தத்து நிறுவனங்களிடம் ஒப்படைப்பு

கோவை

கோவை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் இளையராஜா, காவலர் செந்தில்குமார் ஆகியோர் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் குப்பைத் தொட்டி அருகே கிடந்த, பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை கடந்த அக்டோபர் 18-ம் தேதி மீட்டனர்.

அந்த குழந்தை மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இதுதவிர, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 1.10 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையை விட்டுவிட்டு தாய் காணாமல் போனார். தவறானமுகவரி அளித்து இருந்ததால் அவரை கண்டறிய முடியவில்லை.எடை குறைவாக இருந்த அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் குழந்தையின் எடை 2.01 கிலோவாக அதிகரித்தது. இந்நிலையில், திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களில் உள்ள அரசுஅங்கீகாரம் பெற்ற தத்து நிறுவனங் களிடம் அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் நேற்று குழந்தைகளை ஒப்படைத்தார்.

அப்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர், அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடிச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x