Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

பாஜக சார்பில் நடமாடும் இ-சேவை மையம்

கோவை: கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், நடமாடும் இலவச இ-சேவை மையம் ஈச்சனாரி அருகே நேற்று தொடங்கப்பட்டது. தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான மோகன் மந்தராச்சலம் இ-சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சபரிகிரீஷ் கூறும்போது,‘‘ இரண்டு பேருந்துகளில் இ- சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. நடமாடும் இ-சேவை மையத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் வழங்கும் அனைத்து சான்றிதழ்களையும் பெறலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x