Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

இதில், சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலை வேலன் நகரில் போலியான அழைப்பு மையம் (கால்சென்டர்) நடத்தி வருபவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸார் அங்கு விசாரணை நடத்தியதில், வேலை வாங்கித் தருவதாக கூறி இதுபோல 150-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலி அழைப்பு மையம் நடத்தியதாக பிரபு (31), சாலமன் ரிச்சர்ட் (29), யுவராஜ் (29) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 லேப்டாப், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x