Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை, ஜெர்மனியிலிருந்து 105 ஜெர்சி ரக காளைகளை இறக்குமதி செய்துள்ளது. இந்த ரக மாடுகள், தமிழகத்தின் தட்பவெப்ப நிலைகளுக்கு பொருத்தமற்றவை.
இதனால், நமது மண்ணுக்கும், மரபுக்கும் ஒத்துவராத குளிர் பிரதேசத்து மாடுகளின் கலப்பினம் மூலம் உற்பத்தியாகும் பாலின் ஆரோக்கியம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசு குளிர் பிரதேச காளைகளை இறக்குமதி செய்வதை நிறுத்திவைக்க வேண்டும். மேலும், இதன் சாதக பாதங்கள் குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT