Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இரணியலை அடுத்துள்ள புதூரைச் சேர்ந்தவர் காசி லிங்கம் (52). கட்டிடத் தொழிலாளி. இவரது மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. காசிலிங்கம் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை நேற்று கடந்து சென்றார். அந்நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x