Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
கயத்தாறு அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக நேற்று அதிகாலை கோவில்பட்டி வனச்சரகர் எஸ்.சிவராமுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் வனவர்கள் நாகராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் வனப்பாதுகாப்பாளர்கள் கயத்தாறு அருகே உள்ள வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டன.
அப்போது அய்யனார்ஊத்தில் இருந்து மானாங்காத்தான் இடையே 10 பேர் முயல் வேட்டை யாடுவதற்காக வேட்டை நாய்கள், கண்ணிகள் மற்றும் கம்புகளுடன் பதுங்கி இருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நாகலாபுரத்தை சேர்ந்த சிவன்பெருமாள்(45), அவரது மகன் கருப்பசாமி(24), தடியன்பட்டியை சேர்நத் செல்லத்துரை மகன் அய்யனார்(19), கனி(24), செந்தூர்பாண்டி மகன் சவுந்தர்(24), சந்தனம்(40), மலையாண்டி மகன்பாலு (30), முருகன் (45), வெள்ளைச்சாமி மகன் செல்லப்பாண்டி(32), மாரியப்பன்(55) எனத் தெரிய வந்தது. 10 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT