Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

புத்தக கண்காட்சியில் செய்தித்தாள் வாசித்த மாணவர்கள்

கோவில்பட்டியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த நாளிதழ்கள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி: கோவில்பட்டி வாசிப்பு இயக்கம், ஜேசிஐ சார்பில் நாடார் நடுநிலைப் பள்ளியில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதில், நேற்று பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்த தினசரி செய்திதாள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் இந்து தமிழ் திசை தினசரி செய்தித்தாள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப் பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஜேசிஐ தலைவர் முரளிகிருஷ்ணன் மாணவர்களுக்கு செய்தித்தாள்களை வழங்கி வாசிப்பு பழக்கத்தை தொடங்கி வைத்தார்.கோவில்பட்டி வாசிப்பு இயக்கத் தலைவர் முத்து முருகன், ஜேசிஐ செயலாளர் ரகுபதி, புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x