Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்

வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன், பத்ம, பத்மபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர். கடந்த 2018-ம் ஆண்டு அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவருக்கு, பவனின் பழம்பெரும் விருது வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது மறைவு கர்நாடக இசை ஆர்வலர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

தமிழக முதல்வர் பழனிசாமி: அன்பும், அடக்கமும், எளிமையும், இறைப்பற்றும் மிகுந்த டி.என்.கிருஷ்ணன் இசைக்கல்லூரி பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழக இசை மற்றும் கவின் பள்ளி முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அவர் மறைந்தாலும் அவரது வயலின் இசை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது மறைவு இசைத்துறைக்கும், கலை உலகுக்கும் பேரழிப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x