Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. பாலமேடு பேருந்து நிலையம் அருகே நடந்த முகாமுக்கு வடக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலா ளர் பி.மூர்த்தி அடையாள அட்டைகளை வழங்கினார். நகர் இளைஞரணி அமைப்பாளர் பிரபு, தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1,000-க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT