Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM

கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.1.20 லட்சம் பணம் திருட்டு :

கோவில்பட்டி: கோவில்பட்டி முத்துநகர் பல்லக்கு சாலையைச் சேர்ந்தவர் ச.தியாகராஜன் (71). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் பணத்தை எடுத்து மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். பின்னர், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதே பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த பணம் ரூ.1.20 லட்சம், செல்போன், ஏ.டி.எம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், தபால் நிலைய சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x