Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM

மாநகராட்சி உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் :

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங் களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றி வந்த மண்டல உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் முதலாவது மண்டல உதவி ஆணையராக செந்தில்குமரன், இரண்டாவது மண்டலத்துக்கு வசந்தி, மூன்றாவது மண்டலத்துக்கு சுதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, உதவி ஆணையர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தவர்கள் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x