Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

நாகர்கோவிலில் 42 மிமீ மழை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது.

அதிகபட்சமாக நாகர்கோவிலில் 42 மிமீ, மழை பெய்திருந்தது. அடையாமடையில் 38, ஆனைக்கிடங்கில் 32, மாம்பழத்துறையாறில் 27 மிமீ மழை பதிவாகியிருந்தது. சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளில் தலா 16.50 அடி தண்ணீர் உள்ள நிலையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு நேற்று அணைகள் அடைக்கப்பட்டன.

அதே நேரம், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. 610 கனஅடி தண்ணீர் வருகிறது. 444 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74 அடியாக உள்ளது. 481 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,614 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x