Published : 30 Nov 2021 03:10 AM
Last Updated : 30 Nov 2021 03:10 AM

வேலூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு :

வேலூர் மாநகராட்சி ஆணை யராக அசோக்குமார் பொறுப் பேற்றுக் கொண்டார்.

வேலூர்: வேலூர் மாநகராட்சி ஆணையராக அசோக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

வேலூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சங்கரன் சென்னை பெருநகர மண்டல அலுவலராக சமீபத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, என்யுஎல்எம் இணை இயக்குநராக பணியாற்றி வந்த அசோக்குமார் வேலூர் மாநகராட்சி ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஆணையராக அசோக்குமார் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, மாநகராட்சி உதவி ஆணையர்கள், அலுவலக மேலாளர், மண்டல அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x