Published : 28 Nov 2021 03:09 AM
Last Updated : 28 Nov 2021 03:09 AM

ஏலகிரி மலைக்கு செல்ல தடுப்பூசி சான்று கட்டாயம் :

கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றை காண்பித்தால் மட்டுமே ஏலகிரி மலைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது இடங்களில் நடமாடுபவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஏலகிரி மலை அடிவாரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கும் சான்றுகளை மருத்துவக் குழுவினர் சரி பார்த்த பிறகே மலைக்கு செல்ல அனுமதி அளிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x