Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த இளைஞர் கைது :

நாகர்கோவில்

ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக போலி விளம்பரம் செய்து ஏமாற்றி வருவதாக குமரி சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார்கள் வந்தன. மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், சைபர்கிரைம் ஏ.டி.எஸ்.பி. சுந்தரம் மேற்பார்வை யில் ஆய்வாளர் வசந்தி விசாரணை நடத்தினார்.

அப்போது ஆன்லைனில் பல்வேறு தளங்களின் பெயர்களைக் கூறி அவற்றில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ஏமாற்றி நடைக்காவை சேர்ந்த சுரேஷ்(41) என்பவர் பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

விசாரணையில் ஆன்லைனில் பல நபர்களிடம் பணமோசடி செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆன்லைன் மூலம்வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சைபர் கிரைம் போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x