Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை :

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அருகே உள்ள மணக்கால் வடமழை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சுரேஷ் என்கிற முருகானந்தம்(38). இவரது மனைவி கவிதா(27). இவர்களுக்கு 13, 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கவிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட முருகானந்தம், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், 2015-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி கணவன், மனைவிக்கிடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், முருகானந்தம் அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்த கவிதாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில், கவிதா உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். நாகை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். அதில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த முருகானந்தத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x