Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

:

காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் நசீம்ஜான் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியை கவிதா பங்கேற்று பேசினார். முதலுதவி சிகிச்சை, மூச்சுப் பயிற்சியை எவ்வாறு அளிக்க வேண்டும்.

அதன்பின் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள பொருட்களை கொண்டு சிகிச்சை அளிப்பது, தீ விபத்து உள்ளிட்ட நேரங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கார்த்திகேயன், கல்லூரிமாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x