Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த வாரம் - 1 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க வாய்ப்பு :

புதுச்சேரி, காரைக்காலில் அடுத்தவாரம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் கரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள்கடந்த செப்டம்பரில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்பட்டன. அதையடுத்து தமிழகத்தை பின்பற்றி கடந்த நவம்பர் 8-ம் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்தது. கனமழையால் அந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளி கள் எப்போது திறக்கும் என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கல்வியமைச்சர் நமச்சிவாயம், செயலர் அசோக்குமார், இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் ஆலோசித்தனர்.

இதுதொடர்பாக கல்வியமைச்சர் நமச்சி வாயத்திடம் கேட்டதற்கு, “புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “புதுச் சேரி, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்று ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x