Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
கருங்கல் அருகே மாங்கன்றுவிளையில் நேற்று முன்தினம் மாலை விஜய் வசந்த் எம்.பி., தலைமையில் காங்கிரஸார் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். அனுமதி இல்லாததால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார், இரவில் விடுவித்தனர்.
இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்எல்ஏ., உட்பட 88 பேர் மீது கருங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT