Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

உரிமம் பெற்றவர்களிடம் விதைகளை வாங்க : விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல் :

பென்னாகரம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்கிருந்த விதை விற்பனை இருப்புப் பதிவேடு, கொள்முதல் பட்டியல், பதிவுச் சான்றிதழ் முளைப்புத்திறன் அறிக்கை முறையான பராமரிப்பு, விவசாயிகளுக்கு உரிய ரசீது முறையாக வழங்கப்படுகிறதா என்பன தொடர்பாக ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறியதாவது:

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நன்கு பெய்துள்ளதால் நெல் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு மிகுந்த கவனத்துடன் விதை விநியோகம் செய்ய வேண்டும். மேலும் விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற, விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண் டும்.விதைகள் வாங்கும் போது, விதை பாக்கெட்டுகளில் உள்ள பயிர், ரகம், குவியல் எண், பயிர் பருவம், காலாவதி தேதி உள்ளிட்டவைகளை சரிபார்த்து வாங்க வேண்டும். விதைக்கான ரசீதை கேட்டு பெற வேண்டும். அனைத்து விதை விற்பனை நிலையங்களிலும் உரிய விலைக்கு மட்டுமே விதை விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்வோர்களின் விதை விற்பனை உரிமம் ரத்து செய்வதுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x