Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

தென்பெண்ணை ஆற்றில் கட்டுக்கடங்காத நீர்வரத்து - பாகூர் சுற்று வட்டாரப் பகுதி வெள்ளக் காடானது : 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பி யதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

ஆற்றையொட்டிய பரிக்கல் பட்டு, கொமந்தான்மேடு, இருளன் சந்தை, சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், உச்சிமேடு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள பாகூர் நகருக் குள்ளும் வெள்ளம் புகுந்தது.

பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். மீட்பு பணியில் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

நாராயணசாமி ஆய்வு

முன்னாள் முதல்வர் நாராயண சாமி, முன்னாள் அமைச்சர் கந்த சாமி, எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் மழை வெள்ளம் பாதிக் கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

தென்பெண் ணையாற்றில் மேலும் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலாலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பாகூர் சுற்று வட்டார பகுதி மக்கள் உள்ளனர்.

இதேபோல் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சந்தை புதுக்குப்பம், சுத்துக்கேணி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புதோட்டம் பாதிக்கப்பட்டது. நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

படுகை அணை மேலும் உடைப்பு

இதனிடையே ஏற்கெனவே சேதமடைந்துள்ள செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணையில் ஏற்கெனவே சிறிய அளவில் உடைந்திருந்த நடுப்பகுதி, தற்போது முழுமையாக உடைந் துள்ளது. இதனால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் மீண்டும் வீணாக சென்று கடலில் கலக்கிறது.

வாய்க்காலில் அடித்து

செல்லப்பட்ட ஓட்டுநர்

புதுச்சேரியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இந்நிலையில் சண்முகாபுரம் ஓடைவெளியில் மழை வெள்ளம் ஓடியது.

அதனை பலரும் வேடிக்கை பார்த்தனர். சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கனகராஜ் (63) என்பவரும் வேடிக்கை பாராத்துள்ளார்.

அப்போது திடீரென வாய்க்காலில் தவறி விழுந்ததில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். புதுச்சேரி தீயணைப்பு மற்றும் போலீஸார் அவரை தேடி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x