Published : 21 Nov 2021 03:08 AM
Last Updated : 21 Nov 2021 03:08 AM

குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்: காரைக்கால் மாணவர்களுக்கு பாராட்டு :

காரைக்கால்: புதுச்சேரியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

காரைக்கால் பிராந்தியத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர், பயிற்சியாளர் தேவிதயாள் தலைமையில் இப்போட்டியில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். மேலும், 19 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் காரைக்கால் அணி வென்றது.

இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற காரைக்கால் பிராந்திய அணியினர் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்எல்ஏ நாஜிம் ஆகியோரை நேற்று முன்தினம் காரைக்காலில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாணவர்களை அமைச்சர் வெகுவாக பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x