Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை முயற்சி :

கோவில்பட்டி சரவணாஸ் ஆர்ட்ஸ் பியூசன் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் 10 மாணவர்கள் உலக சாதனைக்காக 50 மீட்டரில் 4 நிலைகளில் தீ எரிந்தவாறு இருந்த தடைகளை ஒரு மணி நேரம், 16 நிமிடம், 20 விநாடிகளில் மொத்தம் 2,940 முறை தாண்டினர்.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். எம்.எஸ்.எஸ்.வி.பாபு, முத்துச்செல்வன், ராகும், ரஞ்சித் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார். காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் உலக சாதனை முயற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மருத்துவர் கோமதிபரிசு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x