Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

வீட்டின் மேல் பாறை விழுந்து இருவர் காயம் :

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை மலையடிவார பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தொடர் மழை காரணமாக செதுக்கரை மலையில் மண் சரிவு ஏற்பட்டு பெரிய பாறை நேற்று முன்தினம் இரவு திடீரென உருண்டு விழுந்தது. இதில், ஒரு குடிசை வீடும் அதன் அருகில் இருந்த அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற்கூடம் முழுமையாக சேதமடைந்தன.

குடிசை வீட்டில் இருந்த கோவிந்தன் (70) மற்றும் அவரது மகள் கலையரசி (35) ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தில் யாரும் இல்லாத நிலையில் அங்குள்ள இயந்திர தளவாடங்கள் மட்டும் சேதமடைந்தன. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x