Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

நீலகிரியில் பசுந்தேயிலை விலை கிலோ ரூ. 14.75 :

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ. 14.75 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இண்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேயிலை வாரியம் அக்டோபர் மாதத்துக்குரிய பசுந்தேயிலைக்கான கொள்முதல் விலையை முதலில் ரூ. 14.74 என நிர்ணயித்தது. இதைத்தொடர்ந்து அனைத்து இண்ட்கோ தொழிற்சாலைகளின் நிர்வாகக் குழுவின் பரிந்துரைகள், அந்த தொழிற்சாலைகளின் நிதி நிலைமை ஆகியவற்றை ஆராய்ந்து பரிசீலனை செய்ததன் அடிப்படையில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ. 14.75 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மஞ்சூர் மற்றும் கைகாட்டி இண்ட்கோ தொழிற்சாலைகளின் அங்கத்தினருக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 15 எனவும், கட்டபெட்டு இண்ட்கோவுக்கு வாராந்திர விலை வழங்கவும் இண்ட்கோசர்வ் வாயிலாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாகவே இண்ட்கோ தொழிற்சாலைகள் தேயிலை வாரியம் நிர்ணயித்த பசுந்தேயிலை விலையைவிட சற்று அதிகமாக வழங்கி வருவதால் இண்ட்கோ தொழிற்சாலைகளுக்கு சிறு தேயிலை விவசாயிகள் அதிக அளவில் பசுந்தேயிலை வழங்கி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x