Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் கண்காணிப்பாளர் ஆஸிஷ் ராவத் ஆலோசனை நடத்தினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடன் நீலகிரி மாவட்ட காவல் துறை சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் உதகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸிஷ் ராவத், நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ், கல்வித் துறை துணை இயக்குநர் ஆஷா மனோகரி ஆகியோர் கலந்துரையாடினர்.
இக்கூட்டத்தில், ஸ்டீரிங் கமிட்டி, புகார் பெட்டி, கவுன்சிலிங் முகாம் ஆகியவை அனைத்துப் பள்ளிகளிலும் இயங்க அறிவுறுத்தப்பட்டன.
மாணவர்களுக்கு எளிதில் புகார் அளிக்கக் கூடிய வகையில் நீலகிரி மாவட்ட காவல் துறை வழிவகை செய்வதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT