Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM

வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து நகை பறிப்பு :

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் செல்லாபாப்பு நகரைச் சேர்ந்தவர் டேனியல் கிருஷ்ணன் மனைவி விண்ணி பிரிசில்லா (50).

தனியார் பள்ளி ஆசிரியையான இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு கேட்பது போல் வந்த இருவர், விண்ணி பிரிசில்லாவின் கழுத்தில் கத்தி வைத்து, அவர் அணிந் திருந்த 5 பவுன் நகையைப் பறித்து, பைக்கில் தப்பிச் சென் றனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோரிமேட்டில் காய்கறி வாங்க சென்ற சீதாலட்சுமி என்பவரிடம் 3 பவுன் செயினை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். கோரிமேடு போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x