Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
குமரியில் கனமழை நீடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 12-ம் தேதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் முட்டம், குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீனவ கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முன்தினத்தில் இருந்து மழை நின்று இயல்பான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாயினர்.
குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகளும், பிற மீனவ கிராமங்களில் இருந்து கட்டுமரங்கள், வள்ளங்களிலும் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இதனால் 5 நாட்களுக்கு பின்னர் குமரி மீன்பிடி துறைமுகங்கள் களைகட்டியிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT