Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு குறைவான பக்தர்களே மாலை அணிந்த நிலையில், நேற்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், வேளிமலை முருகன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட குமரி மாவட்டத்தில் பரவலான கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால் நேற்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT