Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று முன்தினம் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5 கிலோ அரிசி உள்ளிட்டப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன், மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் த.சுப்பையன், ஏ.எம்.கே.அரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT