Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் நாளொன்றுக்கு 550 டன் குப்பை சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.60 வார்டுகளிலும் 1,500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களைக்கொண்டு குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூர் மாநகரில் 200 டன் அளவுக்கு கூடுதலாக குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது ‘‘திருப்பூர் மாநகரில் நாள்தோறும் 550 டன்னுக்கு குறையாமல் குப்பை சேகரிக்கப்படுவது வழக்கம். கடந்த 2 நாட்களில் மட்டும் கூடுதலாக 200 டன் குப்பை அள்ளப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பட்டாசுக் குப்பையாகும்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT