Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

அஞ்செட்டி வட்டத்தில் - தார் சாலை அமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை :

அஞ்செட்டி வட்டம் உரிகம் அருகே கோட்டையூர் ஊராட்சியில் அத்திநத்தம் மலைக்கிராமம் முதல் நூறொந்துசாமி மலை வரை கடந்த ஒரு ஆண்டாக ஜல்லி கற்கள் மட்டும் போடப்பட்டுள்ள சாலையில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அஞ்செட்டி வட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து நூறொந்துசாமி மலைக்கு பூஜை செய்து வழிபட தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அத்திநத்தம் முதல் நூறொந்துசாமி மலை வரை தார் சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வனத்துறையின் ஒப்புதலுடன் அத்திநத்தம் முதல் நூறொந்துசாமி மலைவரை ஜல்லி கற்கள் போடப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக தார் சாலை அமைக்கவில்லை.

இதனால் ஜல்லி கற்கள் நிறைந்த சாலை வழியாகச் செல்லும் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே அத்திநத்தம் மலைக்கிராமம் முதல் நூறொந்துசாமி மலைவரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x